Monday, 13th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இயக்குனர் ரஞ்சித் கையெழுத்திட உத்தரவு

ஜுலை 23, 2019 07:22

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இயக்குனர் ரஞ்சித் மன்னர் ராஜராஜ சோழன் குறித்து தவறாக பேசியதாகவும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கவிதா திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் கடந்த வழக்குப் பதிந்திருந்தார்.

அதனை அடுத்து நடிகர் ரஞ்சித் மதுரை உயர்நீதிமன்றத்தில் 25.6.2019 அன்று முன் ஜாமீன் பெற்றார், அதனையடுத்து இன்று கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜரானார். 

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி நாளை முதல் 3 நாட்கள் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் இயக்குனர் ரஞ்சித் கையெழுத்திட உள்ளார்.

தலைப்புச்செய்திகள்